News Image

கொழும்பில் வெளிநாட்டு தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது

By Admin

கொழும்பு பொலிஸ் அதிகாரிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி, மற்றும் ஐந்து ரவைகளை, கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மாகம்மன பகுதியில் (25) நடத்தப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.